இந்தியா

2-டிஜி கரோனா மருந்தின் விவரங்கள் ஆய்வு செய்யப்படும்- மத்திய அரசு

DIN

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள 2-டிஜி (2 டியோக்ஸி டி-குளூக்கோஸ்) கரோனா மருந்தை நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காக, அதன் விவரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் நீதி யோக் அமைப்பின் உறுப்பினா் வி.கே.பால், செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தபோது கூறியதாவது:

2-டிஜி மருந்தின் விவரங்களை ஆய்வு செய்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ), அதை அவசர கால பயன்பாட்டுக்காக அனுமதி அளித்தது. இந்த மருந்தை கரோனா சிகிச்சையில் முழுமையாக ஈடுபடுத்துவதற்கு முன், அதன் விவரங்களை தேசிய கரோனா தடுப்புக் குழு ஆய்வு செய்யும். அதன் பிறகு இந்த மருந்தை பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றாா் அவா்.

ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆா்.டி.ஓ.) இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வகம் (ஐசிஎம்ஆா்) இணைந்து கரோனா சிகிச்சைக்காக 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. பொடி வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த மருந்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல் தொகுப்பு மருந்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT