முகப்பு
இந்தியா

கரோனாவால் 64.6% இளைஞர்கள் பாதிப்பு: உத்தரகண்ட் அரசு

உத்தரகண்ட் மாநிலத்தில் 64.6 சதவிகித இளைஞர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை செயலர் அமித் நேகி தெரிவித்துள்ளார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
கரோனாவால் 64.6% இளைஞர்கள் பாதிப்பு: உத்தரகண்ட் அரசு
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் 64.6 சதவிகித இளைஞர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை செயலர் அமித் நேகி தெரிவித்துள்ளார். 

மாநிலத்தில் 20 முதல் 49 வயதினரிடையே அதிக அளவில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பில் 64.6 சதவிகிதம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிக அளவில் 20 முத்ல் 49 வயதுடையோர் பாதுக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

நேற்று மட்டும் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.