முகப்பு
இந்தியா

இலங்கையில் 4 நாள்களுக்கு பேருந்து, ரயில்களுக்குத் தடை

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துவரும் நிலையில், இலங்கையில் பயணிகள் ரயில்களையும், பேருந்துகளையும் அடுத்த நான்கு நாள்களுக்கு நிறுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துவரும் நிலையில், இலங்கையில் பயணிகள் ரயில்களையும், பேருந்துகளையும் அடுத்த நான்கு நாள்களுக்கு நிறுத்தியுள்ளது. 

இந்தத் தடை வெள்ளிக்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை நடைமுறைக்கு வருகிறது.

இருப்பினும், சுகாதாரம், உணவு மற்றும் மின் துறைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கும், மருத்துவச் சிகிச்சை பெற விரும்புவோருக்கும் இது பொருந்தாது.

முக்கிய மருத்துவ சங்கங்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கோரியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் கண்டறியப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும் என்று சங்கங்கள் கூறுகின்றன.

பொதுக்கூட்டங்கள், கட்சிகள், திருமணங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

இலங்கையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,54,786ஐ எட்டியுள்ளது, 1089 இறப்புகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.