கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மே 21-ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர்.
தொற்று காரணமாக இலங்கையில் பயணக் கட்டுப்பாடு முன்னதாக மே 28 வரை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
ஜூன் 7 வரை கட்டுப்பாடுகள் தொடரும். ஆனால் மே 25, மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் தளர்த்தப்படும் என்றும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் தங்கள் அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் பயணம் செய்ய யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் பொருள்களை விரைந்து வாங்கிக்கொண்டு உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.