முகப்பு
இந்தியா

கரோனா 2-ம் அலை: 513 மருத்துவர்கள் உயிரிழப்பு

​கரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் முதல் அலையைக் காட்டிலும் 2-ம் அலையில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்த அலையில், வயது வித்தியாசமின்றி இணை நோய் வித்தியாசமின்றி எவருக்கும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய அளவில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், சமீபத்திய தரவுகளின்படி கரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக தில்லியில் 103 பேரும், பிகாரில் 96 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 18 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.