’லட்சத்தீவுகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசு’: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் லட்சத்தீவுகளை அழிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் லட்சத்தீவுகளை அழிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அவரின் புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும், ஜனநாயகமற்ற முறையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
லட்சத்தீவுகளின் நிர்வாகியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது சுட்டுரைப் பதிவில், “லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம். மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் அதனை அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் லட்சத்தீவுகளின் மக்களுடன் உடன் நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.