இந்தியா

கரோனா 2-ம் அலையிலிருந்து மீண்டு வருகிறது மும்பையின் தாராவி

ANI


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா 2-ம் அலையிலிருந்து மும்பையின் தாராவி முழுமையாக மீண்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் கரோனா 2ம் அலை தீவிரமடையத் தொடங்கியது முதல் தாராவியில் பதிவாகும் மிகக் குறைந்த கரோனா பாதிப்பு இதுவாகும்.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியி சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கரோனா முதல் அலையின் போது தாராவியில் கரோனா வெகுச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது, உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இதுவரை அங்கு 6,798 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 62 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் காந்தி மைதானத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நீச்சல் குளம்

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா ஏற்பாடு: அதிகாரிகள் ஆய்வு

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா

ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் வீராங்கனை அனுஷியா பங்கேற்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

SCROLL FOR NEXT