இந்தியா

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது! தமிழகம் சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

DIN

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தின் சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டுள்ளார். 

கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு 12% வரை வரி விதிக்கப்படுகிறது.

தற்போது கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் சிகிச்சைக்குப் பயன்படும் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.

எனவே, கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அனைத்தும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ, வரி விதிப்பை ரத்து செய்வது, மிகை வரியை செலுத்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று கூறி வருகிறது.

எனவே இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும், ஜிஎஸ்டியால் இழப்பை சந்தித்துள்ள மாநிலங்களுக்கு நிதி அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT