கரோனா 2-ம் அலைக்கு பிரதமர் மோடியே காரணம்: ராகுல் காந்தி 
இந்தியா

கரோனா 2-ம் அலைக்கு பிரதமர் மோடியே காரணம்: ராகுல் காந்தி

நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார்.

IANS


புது தில்லி: நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார்.

நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவது குறித்து மத்திய அரசை குற்றம்சாட்டியிருக்கும் ராகுல் காந்தி, நாட்டில் தற்போது கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் வெற்றி பெற கரோனா தடுப்பூசிதான் ஒரே வழி.

மத்திய அரசோ, நாட்டில் கரோனா பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்டி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்னையே கரோனா தொற்றை புரிந்து கொள்ளாத மத்திய அரசும் பிரதமரும்தான். கடந்த ஆண்டே கரோனா பெருந்தொற்றுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்று நான் வலியுறுத்தினேன். கரோனா தடுப்பூசிதான் ஒரே நிரந்தர தீர்வு. தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படாவிட்டால், இந்த வைரஸ் அடுத்தடுத்து உருமாறிக் கொண்டு 3, 4 என அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் போட்டி

வாழப்பாடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

SCROLL FOR NEXT