முகப்பு
இந்தியா

கங்கையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆறு சடலங்கள் மீட்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கங்கையில் மிதந்து கிடந்த கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், கங்கையில் மிதந்து கிடந்த கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

ஃபதேபூர் சதர் தெஹ்ஸில் சப்-கலெக்டர் (எஸ்.டி.எம்) பிரமோத் ஜா, ஞாயிற்றுக்கிழமை காலை ஆற்றில் மிதக்கும் சடலங்கள் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அழுகிய நிலையில் ஆறு உடல்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றார். கரோனா வழிகாட்டுதலின் படி பிட்டோரா கங்கா காட்டில் மருத்துவர்கள் குழு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

Advertisement

சடலங்கள் மிகவும் சிதைந்திருப்பதால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை, அவை தொலைதூர இடங்களிலிருந்து மிதந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த மாத தொடக்கத்தில், பல்லியாவின் நாராஹி பகுதியில் உள்ள உஜியார், குல்ஹாடியா மற்றும் பாரௌலி காட் ஆகிய இடங்களில் குறைந்தது 52 சடலங்கள் மிதந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments