தீபாவளிக்கு அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்: வணிக சிலிண்டர் விலை ரூ.266 உயர்வு 
இந்தியா

தீபாவளிக்கு அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்: வணிக சிலிண்டர் விலை ரூ.266 உயர்வு

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலையை ரூ.266 உயர்த்தி எண்ணெண் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

DIN


புது தில்லி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலையை ரூ.266 உயர்த்தி எண்ணெண் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன் மூலம் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ஒன்றுக்கு ரூ.266 உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

இந்த விலை உயர்வு காரணமாக, தில்லியில் வணிக எரிவாயு உருளை விலை இதுவரை ரூ.1,734 ஆக இருந்தது, இன்று முதல் ரூ.2000 ஆக உயர்ந்துள்ளது.

மிக அதிகபட்சமாக சென்னையில் இன்று முதல் வணிக சிலிண்டர் விலை ரூ.2,133 ஆக உயர்ந்துள்ளது. இதுவே மும்பையில் ரூ.1,950 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,073 ஆகவும் உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT