தடுப்பூசி செலுத்த ஆர்வம்காட்டாத மாவட்டங்கள்: ஆட்சியர்களுடன் மோடி ஆலோசனை
குறைவான கரோனா தடுப்பூசிகள் செலுத்திய மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாதடுப்பூசி செலுத்த ஆர்வம்காட்டாத மாவட்டங்கள்: ஆட்சியர்களுடன் மோடி ஆலோசனை
குறைவான கரோனா தடுப்பூசிகள் செலுத்திய மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
குறைவான கரோனா தடுப்பூசிகள் செலுத்திய மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் 107 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், சில மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் தடுப்பூசி போடும் பணி மந்தமாக இருக்கின்றது.
இந்நிலையில், நாடு முழுவதும் 50 சதவீதத்திற்கும் குறைவான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்திலிருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். மேலும், ஜார்கண்ட், தமிழகம், மகாராஷ்டிரம், மணிப்பூர், அருணச்சலம் ஆகிய மாநில முதல்வர்களும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.