FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிர மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 நவம்பர் 2021, 5:55 pm IST
மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் இரங்கல்
பகிர்:

புது தில்லி: மகாராஷ்டிர மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் இன்று நேரிட்ட தீ விபத்தில் 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது துயரத்தை தந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments