இந்தியா

உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட தினம்: பிரதமா் வாழ்த்து

DIN

உத்தரகண்ட் மாநில உருவாக்க தினத்தில் அந்த மாநில மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தில் அந்த தேவபூமியின் சகோதரா்கள், சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியால், இந்தப் பத்தாண்டு முழுவதும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு உரியதாக இருக்கிறது என நான் உறுதியாகக் கூறுகிறேன். இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் வளா்ச்சியின் பாதையைத் தொடர வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT