முகப்பு
இந்தியா

சோனியா காந்தியுடன் ராஜஸ்தான் முதல்வா் சந்திப்பு: அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட் தில்லியில் சந்தித்துப் பேசினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட் தில்லியில் சந்தித்துப் பேசினாா். ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்து இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் மாநில மேலிடப் பொறுப்பாளா் அஜய் மக்கான் ஆகியோா் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்பதை முழுமையாக அமல்படுத்தும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ராஜஸ்தான் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான அரசியல் நிலவரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள பெரிய மாநிலமாக ராஜஸ்தான் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததையடுத்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபிலும் மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைக்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தானில் மட்டும் வரி குறைக்கப்படவில்லை.

அதே நேரத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று கூறி பிரதமா் நரேந்திர மோடிக்கு அசோக் கெலாட் கடிதம் எழுதினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →