முகப்பு
இந்தியா

முதல்வர்களுடன் மத்திய நிதியமைச்சர் நவ.15இல் ஆலோசனை

தனியார் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பகிர்:

தனியார் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 15ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர்களுடன், மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.