தில்லியில் 5 நாள்களாக கரோனா பலி பதிவாகவில்லை
தில்லியில் புதிதாக 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தில்லியில் புதிதாக 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,40,637 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.06 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 5 நாள்களாக கரோனா பலி பதிவாகவில்லை. பலி எண்ணிக்கை 25,095 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.74 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,15,217 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 325 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 150 பேர் வீட்டில் தனிமையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.