கோப்புப்படம் 
இந்தியா

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய ஊழல்: ராகுல் குற்றச்சாட்டு

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

DIN

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக அரசின் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் 'அனைவருக்கும் வங்கிக் கணக்கு' தொடங்கும் திட்டமான 'ஜன் தன் யோஜனா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. 

இந்நிலையில், ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து கடந்த 2017 முதல் 2020 செப்டம்பர் வரை ரூ. 254 கோடி வசூலித்துள்ளதாகவும் இதில் ஒவ்வொரு கணக்கில் இருந்தும் தலா ரூ. 17.70 பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஏழைகளுக்கான ஜன் தன் வங்கி கணக்குகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.  'பணமிருக்கும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு யார் பொறுப்பு?' என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT