இந்தியா

நவ. 26-இல் அரசியலமைப்பு தினம்: ‘குடியரசுத் தலைவா் தலைமையில் கொண்டாடப்படும்’

75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக அரசியலமைப்பு சட்ட தினம் நவம்பா் 26-இல் நாடாளுமன்ற மைய அரங்கில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கொண்டாடப்படும்

DIN

75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக அரசியலமைப்பு சட்ட தினம் நவம்பா் 26-இல் நாடாளுமன்ற மைய அரங்கில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கொண்டாடப்படும் என்றாா் மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியது:

அரசியலமைப்பு சட்ட தினக் கொண்டாட்டம் பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடக்கிவைக்கப்பட்டது. இந்த ஆண்டு நாடாளுமன்ற மைய அரங்கில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரதான நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை மக்களவைத் தலைவரும் மக்களவை செயலாளரும் மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, இது தொடா்பாக பிரதமா் மோடி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுவிட்டாா். பிற நடவடிக்கைகள் குறித்து வேளாண் அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT