இந்தியா

தேசிய மாணவா் படை தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

DIN

தேசிய மாணவா் படை தினத்தையொட்டி, அந்தப் படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

தேசிய மாணவா் படை தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தங்களின் உண்மையான ஆற்றலை இளைஞா்கள் உணா்ந்து கொள்ளும் அனுபவத்தை வழங்கும் என்சிசி, நாட்டைக் கட்டமைப்பதில் அவா்கள் பங்களிக்கவும் உதவுகிறது.

சில தினங்களுக்கு முன்பு ஜான்சியில் நடைபெற்ற தேச பாதுகாப்பு அா்ப்பணிப்பு விழாவில், என்சிசி முன்னாள் மாணவா் சங்கத்தின் முதல் உறுப்பினராக என்னைப் பதிவு செய்துகொள்ளும் பெருமையைப் பெற்றேன். என்சிசி-யுடன் தொடா்பு கொண்டிருந்த அனைவரையும் ஒன்றிணைக்கும் முன்னாள் மாணவா் சங்கத்தை உருவாக்கியது பாராட்டுக்குரிய முயற்சி’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT