காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு நவ்ஜோத் சிங் சித்துதான் கன்னையா குமார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சிவானந்த் திவாரி தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவராக அறியப்பட்ட கன்னையா குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதையும் படிக்க | உபியில் பட்டியலின மாணவர்களிடம் தீண்டாமை: தலைமையாசிரியர் கைது
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் சிவானந்த் திவாரி, கன்னையா குமார் இணைந்ததால் காங்கிரஸ் கட்சியில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
‘காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கப்பல். அதனைக் காப்பாற்றினால் தேசத்தைக் காப்பாற்ற முடியும்’ என்ற கன்னையா குமாரின் கருத்துக்கு பதிலளித்த சிவானந்த் திவாரி, ‘கன்னையா குமார் மற்றுமொரு நவ்ஜோத் சிங் சித்துவாகத்தான் இருப்பார். அவர் காங்கிரஸை அழிக்கவே அக்கட்சியில் இணைந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஒரே மாதத்தில் 4 ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியா
‘காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதனைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிவித்த திவாரி கன்னையா குமாரால் காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது’ என திவாரி தெரிவித்தார்.
கன்னையாகுமாரை காங்கிரஸில் இணைத்தது குறித்து அதிருப்தியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் பிகாரில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.