லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம் 
இந்தியா

லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை முடக்கியது.

DIN

மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை முடக்கியது.

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவிற்கு பின் லோக் ஜனசக்தி கட்சியில் மோதல்போக்கு நிலவத் தொடங்கியது. சிராக் பாஸ்வான் தலைமையில் ஒரு தரப்பினரும், பசுபதிகுமார் பாரஸ் தலைமையில் ஒரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்கிற அடிப்படையில் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக மோதிக் கொண்ட இருதரப்பினரும் மாறிமாறி ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கியதாக அறிவித்தனர். 

இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிராக் பாஸ்வான் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் என பசுபதிகுமார் குறிப்பிட்டது உண்மையில்லை எனவும் அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இருதரப்பினருக்கும் இடையே கட்சியின் சின்னத்தைப் பெறுவதில் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் லோக்ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது.

சனிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதனால் இடைத்தேர்தல் லோக் ஜனசக்தி கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வான், கட்சிக்கும் மக்களவைக் குழுவுக்கும் தலைவராக இருந்தாா். கடந்த ஆண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி, பாஜக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. சிராக் பாஸ்வானின் முடிவு பசுபதிகுமாா் பாரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

SCROLL FOR NEXT