இந்தியா

சிஐஎல், ஓஎன்ஜிசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடி ஈவுத்தொகை

DIN

பொதுத் துறை நிறுவனங்களான கோல் இந்தியா (சிஐஎல்) மற்றும் ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடியை ஈவுத்தொகையாக வழங்கியுள்ளன.

இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை செயலா் துகின் கந்தா பாண்டே சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கோல் இந்தியாவிடமிருந்து ரூ.1,426 கோடியும், ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து ரூ.1,406 கோடியும் நடப்பு நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய பெற்றுக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-மாா்ச்) இதுவரையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ரூ.4,576 கோடி பெறப்பட்டுள்ளது.

இதுதவிர, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலமாக ரூ.9,110 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக பாண்டே தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT