ராகுல்காந்தி (கோப்புப்படம்) 
இந்தியா

நாளை (அக்.6) லக்கிம்பூர் செல்கிறார் ராகுல்காந்தி

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க ராகுல்காந்தி நாளை லக்கிம்பூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க ராகுல்காந்தி நாளை லக்கிம்பூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி நாளை (அக்.6) லக்கிம்பூர் செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல்காந்தியும் உத்தரப்பிரதேசம் செல்ல இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT