இந்தியா

மும்பையில் ரூ. 125 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

ANI

மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பை நிவா ஷேவா துறைமுகத்தில் கண்டெய்னர் ஒன்றிலிருந்து 25 கிலோ ஹெராயின் வகை போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 125 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரை கைது செய்துள்ள புலனாய்வு பிரிவினர் அக்டோபர் 11 வரை காவலில் எடுத்துள்ளனர்.

முன்னதாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT