முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

Updated On : 11 அக்டோபர், 2021 at 11:19 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இம்தியாஸ் அகமத் தார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டனர். காஷ்மீர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் விஜய் குமார் இத்தகவலை உறுதி செய்துள்ளார். 

Advertisement

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் மூவரும், வியக்கிழமை நடத்திய தாக்குதலில் ஆசியர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.