கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் கடந்த 10 நாள்களில் 139 பேருக்கு டெங்கு பாதிப்பு

தில்லியில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

DIN

தில்லியில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் அதே சூழ்நிலையில் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், தில்லியில் கடந்த சில தினங்களாக டெங்கு பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 217 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபரில் கடந்த 10 நாள்களில் மட்டும் 139 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நடப்பு ஆண்டில் மொத்த பாதிப்பு 480 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இங்கு டெங்குவினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த தில்லி அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது? இன்றைய நிலவரம்!

ஆலந்து தொகுதியில் வாக்குத் திருட்டு: ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80... அதிர்ச்சி தகவல்!

ரோஹித் அரைசதம்! ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புதிய சாதனை!

மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT