இந்தியா

லக்கிம்பூர் கலவரம்: விளக்குடன் இளைஞர் காங். பேரணி

DIN

லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கையில் டார்ச் விளக்குகளை ஏந்தியவாறு தில்லியில் பேரணி நடத்தினர்.

இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.

மேலும் இந்தச் சம்பவத்தால் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆத்திரத்தில் தாக்கியதில் காா் டிரைவா் உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

பல்வேறு மாநிலங்களில் ஆளுநா் மாளிகை அருகிலும், யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநா் அலுவலகத்துக்கு எதிரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தவகையில் தில்லியில் இளைஞர் காங்கிரஸார் கைகளில் டார்ச் விளக்குடன் பேரணியில் ஈடுபட்டனர்.  இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT