இந்தியா

மன்மோகன் சிங் எய்ம்ஸில் அனுமதி: விரைவில் குணமடைய மோடி வாழ்த்து

DIN

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மேலும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வழக்கமான சிகிச்சையே அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செயலாளா் பிரணவ் ஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 89 வயதான மன்மோகன் சிங் ஏப்ரல் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT