இந்தியா

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்: பிரதமருடன் அமித்ஷா ஆலோசனை

DIN

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைகளை கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்நிலைக் குழு அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT