இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் குண்டு வீசித் தீவிரவாதிகள் தாக்குதல்

ANI

ஜம்மு - காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை காலை தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா அருகே சும்பல் பாலம் பகுதியில் சென்ற பாதுகாப்புப் படையின் வாகனம் மீது குறி வைத்து இன்று காலை கையெறி குண்டை தீவிரவாதிகள் வீசியுள்ளனர்.

ஆனால், பொதுமக்கள் சென்ற வாகனங்கள் மீது விழுந்ததில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT