முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் நவ.7 முதல் குட்கா, பான் மசாலாவுக்கு தடை

மேற்கு வங்க மாநிலத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதிப்பதாக மாநில சுகாதாரத்துறை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 அக்டோபர், 2021 at 1:06 PM
கோப்புப்படம்
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதிப்பதாக மாநில சுகாதாரத்துறை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

“மேற்கு வங்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா மற்றும் பான் மசாலாவை உற்பத்தி, விற்பனை செய்ய மற்றும் பதுக்கி வைக்க தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

இந்த பொருள்கள் எந்த பெயரில் சந்தைகளில் விற்கப்பட்டு வந்தாலும் நவம்பர் 7ஆம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த தடையானது அடுத்த ஓராண்டிற்கு அமலில் இருக்கும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.