நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் 12,428 பேரும், நேற்று 13,451 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (அக்.28) சற்று அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் புதிதாக 16,156 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 31 ஆயிரத்து 809-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 733 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,56,386-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் மட்டும் 17,095 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக்க கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,14,434 -ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,60,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 104.04 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.