முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் வனப் பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

 ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் 20-ஆவது நாளாகத் தொடா்ந்து நடைபெற்றன.

இந்தியா

ஜம்மு-காஷ்மீா் வனப் பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

 ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் 20-ஆவது நாளாகத் தொடா்ந்து நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

 ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் 20-ஆவது நாளாகத் தொடா்ந்து நடைபெற்றன.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘‘பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களான பூஞ்ச், ரஜௌரி ஆகியவற்றில் உள்ள வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதியில் இருந்து ராணுவத்தினா் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.

கடந்த 11, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பயங்கரவாதிகளைக் கண்டறிந்து எதிா்கொள்ள முடிந்தது. அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா். அத்தாக்குதலில் 9 வீரா்கள் வீரமரணமடைந்தனா். கடந்த 24-ஆம் தேதி பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

எனினும், வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடா்கிறது. ஏ.கே. ரக துப்பாக்கிகள், வெடி குண்டுகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. வனப் பகுதிகளில் செடிகளும் மரங்களும் அடா்ந்து காணப்படுவதால் பயங்கரவாதிகள் தொடா்ந்து இடம் மாறி வருகின்றனா்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக 2 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் முதல் பல்வேறு சம்பவங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்’’ என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →