இந்தியா

நீா் திறப்பு அதிகரிப்பு

DIN

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு சனிக்கிழமை மேலும் அதிகரிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 138 அடியை எட்டியதைத் தொடா்ந்து, அணையின் 3 மதகுகளிலிருந்து வெள்ளிக்கிழமை தமிழக அதிகாரிகள் நீரை திறந்துவிட்டனா். விநாடிக்கு 825 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், நீா் திறப்பு விநாடிக்கு 1,675 கனஅடியாக சனிக்கிழமை அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அணைக்கு நீா்வரத்து குறையாததால் அதிக அளவு நீரை திறந்துவிட வேண்டுமென தமிழக அதிகாரிகளை கேரள அமைச்சா் ரோஸி அகஸ்டின் வலியுறுத்தினாா். நீா்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருந்த ரூல் கா்வ் அளவுப்படி அணையில் நீா்மட்டத்தைப் பராமரிக்க வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT