நாகபுரி: ராஷ்டிரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (செப். 3, 4) நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு தலைவா் சுனில் அம்பேத்கா் கூறியதாவது:
ஆா்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒவ்வோா் ஆண்டும் செப்டம்பரில் நடத்தப்படும். கரோனா பாதிப்பு நிலவரம் காரணமாக கடந்த ஆண்டு இந்தக் கூட்டம் சிறிய அளவில் நடத்தப்பட்டது. அதுபோல, தற்போது செப்டம்பா் 3, 4 தேதிகளில் நடைபெறும் கூட்டமும் சிறிய அளவிலேயே நாகபுரியில் நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆா்எஸ்எஸ், விஹெச்பி, பாரதிய மஸ்தூா் சங்கம், வித்ய பாரதி உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.
கரோனா நிலைமை சீரானால், வரும் 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் முழு அளவிலான தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.