முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 32,097 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 32,097 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 32,097 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,74,307 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 32,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக திரிச்சூரில் 4,334, எர்ணாகுளத்தில் 3,768, கோழிக்கோட்டில் 3,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,40,186 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 188 பலியானார்கள். 

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 21,149ஆக உயர்ந்தள்ளது. கரோனாவிலிருந்து இன்று 21,634 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 38,60,248ஆக உயர்ந்துள்ளது. 5,68,087 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.