முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் ஒருவர்கூட நோய்த் தொற்றால் பலியாகவில்லை: முதல்வர்

நாட்டிலேயே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ள மாநிலம் ராஜஸ்தான் என முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டிலேயே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ள மாநிலம் ராஜஸ்தான் என முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது:

"ராஜஸ்தானில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவே குறைந்த எண்ணிக்கை. கடந்த ஒரு மாதத்தில் ராஜஸ்தானில் ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை.

கரோனா மீண்டும் பரவலாம். எனவே, முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது முக்கியம்.

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 4.55 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 1.10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.