கோப்புப்படம் 
இந்தியா

கேரள பள்ளிகளில் செப்.6-ல் நேரடித் தேர்வுகள்: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் நேரடித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ANI

கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் நேரடித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் 30,000க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளிகளில் நேரடி தேர்வுகள் நடத்த மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்,

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. நாள்தோறும் 35,000 பேர் பாதிக்கப்படும் நிலையில் குழந்தைகளை ஆபத்தில் விடமுடியாது. 

ஆகையால், கேரள அரசின் அறிவிப்பிற்கு இடைக்கால தடைவிதித்து அடுத்த விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மருத்துவமனையில் அனுமதி

நாசாவின் நிலவுப் பயணம் ஒத்திவைப்பு

அயல்நாடுகளில் வசிப்பவா்களும் மதுரையில் தொழில் தொடங்க விருப்பம்: அமைச்சா் பி. மூா்த்தி

தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 போ் இடைநீக்கம்- அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

SCROLL FOR NEXT