இந்தியா

உ.பி.யில் 20 நாய்கள் விஷம் வைத்துக் கொலை: முதல் தகவல் அறிக்கை பதிவு

PTI


மஹோபா: உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் விஷம் கலந்த உணவைக் கொடுத்ததில் 20 நாய்கள் பலியாகின.

இது குறித்து பசௌரா கிராமத் தலைவர் சுக்நந்தன் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில், அந்த கிராமத்துக்கு வந்த சிலர், ரொட்டிகளில் விஷம் கலந்து அங்கிருந்த நாய்களுக்குக் கொடுத்துள்ளனர். இதில் 20 நாய்கள் பலியாகின. பல நாய்கள் விஷம் கலந்த உணவை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

நாய்களை விஷம் வைத்துக் கொன்றவர்கள் யார், அவர்கள் எதற்காக அவ்வாறு செய்தார் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT