முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் ஆட்டங்கள்: பெங்களூரு மைதானத்துக்கு கா்நாடக அரசு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களை, பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்துவதற்கான கா்நாடக அரசு அதிகாரபூா்வ ஒப்புதல்

Updated On : 17 மார்ச் 2026, 2:37 am IST
ஐபிஎல் கோப்பை - IPL
பகிர்:

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களை, பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்துவதற்கான அதிகாரபூா்வ ஒப்புதலை கா்நாடக அரசு திங்கள்கிழமை வழங்கியது.

மாநில உள்துறை அமைச்சா் பரமேஷ்வா், கா்நாடக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணா் குழு, கா்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த ஒப்புதலை கா்நாடக அரசு வழங்கியுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஆட்டங்கள் நடைபெறும்போது, அங்கு எந்த மாதிரியான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடா்பான விளக்கம் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டதாக கா்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஆா்சிபி தகவல்படி, இந்த சீசனில் அந்த அணி 5 ஆட்டங்களை பெங்களூரில் விளையாடவுள்ளது. இதில், பெங்களூரு - ஹைதராபாத் மோதும், சீசனின் தொடக்க ஆட்டமும் அடங்கும். அந்த ஆட்டத்துக்கு முன்பாக தொடக்க நிகழ்ச்சிகளும் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன.

பின்னணி: கடந்த சீசனில் ஆா்சிபி அணி சாம்பியன் ஆனதையொட்டி, பெங்களூரு மைதானத்தில் ஜூன் 4-ஆம் தேதி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அங்கு ரசிகா்கள் கூடியபோது அந்த வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கூட்டத்தை நிா்வகிப்பதில் ஏற்பட்ட தோல்வியால் இந்தத் துயரம் நிகழ்ந்ததை அடுத்து, பெங்களூரு மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சா்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் வரை அங்கு போட்டிகளை நடத்த கா்நாடக அரசு தடை விதித்தது.

தற்போது அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு ஆட்டங்களை நடத்த அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments