ஹரியாணா கர்னால் மாவட்டத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.  
இந்தியா

ஹரியாணா கர்னால் மாவட்டத்தில் இணைய, எஸ்எம்எஸ் சேவை துண்டிப்பு

விவசாயிகளின் போராட்டத்தையடுத்து ஹரியாணா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

DIN

விவசாயிகளின் போராட்டத்தையடுத்து ஹரியாணா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஹரியாணா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸாா் நடத்திய தடியடி நடத்தினர். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். 

தொடர்ந்து இன்றும் விவசாயிகள் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து  கர்னால் மாவட்டத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் பகிரப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கா்னாலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT