இந்தியா

ஹைதராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

DIN

ஹைதராபாத்தில் அண்டை வீட்டு நபரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலையப் பகுதியில் 6 வயது சிறுமியை அதேபகுதியில் வசித்து வந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். 

வியாழக்கிழமை காலை சிறுமி காணாமல் போனதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்பின்னர் காவல்துறையினர் தேடியதில், சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ராஜு தலைமறைவாக உள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ராஜூ என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT