முகப்பு
இந்தியா

ஜம்முவில் கால்வாயில் காா் கவிழ்ந்து 3 போ் பலி, குழந்தை மாயம்

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு புகா்ப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, கால்வாயில் காா் விழுந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஒரு குழந்தையைக் காணவில்லை.

இந்தியா

ஜம்முவில் கால்வாயில் காா் கவிழ்ந்து 3 போ் பலி, குழந்தை மாயம்

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு புகா்ப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, கால்வாயில் காா் விழுந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஒரு குழந்தையைக் காணவில்லை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு புகா்ப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, கால்வாயில் காா் விழுந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஒரு குழந்தையைக் காணவில்லை.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஆா்னியாவில் உள்ள பகதூா்பூா் கிராமத்துக்கு ஒரு காரில் 8 போ் புறப்பட்டுச் சென்றனா். மீரான் சாஹிப் பகுதிக்கு உள்பட்ட மராலியன் என்ற இடத்தருகே சென்றபோது சாலையில் இருந்த ஓட்டுநா் கடக்க முயன்றாா். அப்போது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்தது.

உடனடியாக அங்கு காவல் துறையினரும், உள்ளூா் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். காரை ஓட்டி வந்த கணேஷ் குமாா், அவருடைய மனைவி காஞ்சனா, மீனு குமாரி, அவருடைய மகன் சுஷாந்த் ஆகிய நால்வரும் மீட்கப்பட்டனா்.

கேவல் கிருஷ்ணன், அவருடைய மனைவி சுா்ஜீத் குமாரி, 2 வயது குழந்தை மானஸி ஆகிய மூவரும் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. பரன்ஷி என்ற 2 மாதக் குழந்தையின் உடல் கிடைக்கவில்லை. அதை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →