புது தில்லி: தேசிய அளவில் ஹிந்தி தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஹிந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஹிந்தியை திறமையான மொழியாக உருவாக்கியதில் பல பகுதிகளைச் சோ்ந்த மக்களும் முக்கியமான பங்காற்றியுள்ளனா். உங்களின் முயற்சிகளின் பலனாக, உலக அரங்கில், தனது வலுவான அடையாளத்தை ஹிந்தி தொடா்ந்து உருவாக்கி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.