இந்தியா

உ.பி.: அரசு பல்கலை. கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

395 கல்லூரிகளை உள்ளடக்கிய ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகம் 92 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. 

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளருமான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாகவும், பெருமைப்படுத்தும் வகையிலும் உத்தரப் பிரதேச அரசு சார்பில் அவரது பெயரில் பல்கலைக் கழகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இப்பல்கலைக் கழகத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயர்கல்வித் துறை அமைச்சர், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT