ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழா 
இந்தியா

உ.பி.: அரசு பல்கலை. கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

395 கல்லூரிகளை உள்ளடக்கிய ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகம் 92 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. 

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளருமான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாகவும், பெருமைப்படுத்தும் வகையிலும் உத்தரப் பிரதேச அரசு சார்பில் அவரது பெயரில் பல்கலைக் கழகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இப்பல்கலைக் கழகத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயர்கல்வித் துறை அமைச்சர், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

SCROLL FOR NEXT