இந்தியா

பாஜகவின் இ-ராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: அகிலேஷ்

DIN


லக்னௌ: சமூக வலைத்தளங்களில் பாஜகவின் இ-ராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது பொய்யான தகவல்களைப் பரப்ப அவர்கள் பயன்படுத்தப்படுத்தப்படுவர் என்று சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜயந்தி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், சமூக வலைத்தளத்தில் பயிற்சி பெற்ற இ-ராவணர்கள் பயன்படுத்தப்படுவார்கள். பாஜக பல பொய்யான தகவல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும். அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கத்தின் போது, பணக்காரர்களுக்காக விமான சேவையை இயக்கி வந்த மத்திய அரசு, ஏழை மக்களுக்கான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை நிறுத்தியதையும் அகிலேஷ் யாதவ் சுட்டிக்காட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT