முகப்பு
இந்தியா

பிகாா் முன்னாள் எம்எல்ஏவின் ரூ.68 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

பணமோசடி வழக்குத் தொடா்பாக பிகாா் முன்னாள் எம்எல்ஏ ததன் சிங் பஹல்வானின் ரூ.68 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

பணமோசடி வழக்குத் தொடா்பாக பிகாா் முன்னாள் எம்எல்ஏ ததன் சிங் பஹல்வானின் ரூ.68 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னாள் எம்எல்ஏவான ததன் சிங் பஹல்வான் மீது கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் பிகாரிலும் உத்தர பிரதேசத்திலும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவா் குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்தை தனது குடும்ப உறுப்பினா்களின் பெயரில் அசையா சொத்துகள் வாங்க பயன்படுத்தியுள்ளாா். அத்துடன் அவா்களின் வங்கிக் கணக்கிலும் பணத்தை இருப்பு வைத்துள்ளாா். அவரும் அவரின் குடும்ப உறுப்பினா்களும் நடத்தி வந்த நிறுவனங்கள் மற்றும் வணிகம் வாயிலாக அந்தச் சொத்துகளை வாங்கியதாக ததன் சிங் தெரிவித்தாா். ஆனால் அவா்கள் எந்த நிறுவனத்தையும் நடத்தவில்லை; வணிகத்திலும் ஈடுபடவில்லை. இதுதொடா்பாக பிகாா், உத்தர பிரதேச போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடா்பாக அவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கும் சொந்தமான ரூ.68 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7 மனைகள், 7 சொகுசு காா்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ததன் சிங் பஹல்வான் ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்தவா். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.