உயிரிழந்த விமானிகள் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

DIN

ஜம்மு - காஷ்மீர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மேஜர் ரோஹித் குமார் மற்றும் மேஜர் அனுஜ் ராஜ்புட் ஆகிய இரு விமானிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்துள்ளனர்.

ஆனால், மலைப் பகுதியில் தரையிறக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த இரண்டு விமானிகளையும் படுகாயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இரு விமானிகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிமான்டி காலனி - 3 அப்டேட்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: சிவன் பார்த்துக் கொள்வார்! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

ஆண்டின் இறுதி நாள் வணிகம் உயர்வுடன் தொடக்கம்!

180 கி.மீ. வேகத்திலும் சிந்தாத நீர்! அமைச்சர் பகிர்ந்த வந்தே பாரத் ரயில் விடியோ!

SCROLL FOR NEXT