இந்தியா

1.2 கோடி ஆலோசனைகளை வழங்கியது இ-சஞ்சீவனி தேசிய தொலை மருத்துவ சேவை

DIN

இந்திய அரசின் தேசிய தொலை மருத்துவ சேவையான இ-சஞ்சீவனி 1.2 கோடி ஆலோசனைகளை வழங்கி நாட்டின் மிகவும் பிரபலமான தொலை மருத்துவ சேவையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
 இத்திட்டத்தின் மூலம் தொலைபேசி மற்றும் காணொலி அழைப்புகளில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 தற்போது நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 90,000 பேருக்கு சேவை அளிப்பதன் வாயிலாக நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் இடையே இந்தச் சேவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 இ-சஞ்சீவனி, ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் சுமார் 67,00,000 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் தொலைமருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.
 சுகாதார சேவைகள் கிடைப்பதில், இந்தியாவின் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நிலவும் இடைவெளியை இ-சஞ்சீவனி தேசிய தொலை மருத்துவ சேவை நீக்குகிறது.
 இந்தியாவில் மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள தொலை மருத்துவ ஆலோசனைகளில் முதல் 10 இடங்களை வகிக்கும் மாநிலங்களின் பட்டியல் பின்வருமாறு: ஆந்திரம் (37,04,258), கர்நாடகம் (22,57,994), தமிழ்நாடு (15,62,156), உத்தர பிரதேசம் (13,28,889), குஜராத் (4,60,326), மத்திய பிரதேசம் (4,28,544), பிகார் (4,04,345), மகாராஷ்டிரம் (3,78,912), மேற்கு வங்கம் (2,74,344) மற்றும் கேரளம் (2,60,654).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT